கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு

கோவை பிஆர்எஸ் மைதானத்தில் மாநகர ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடத்தப்பட்டது.



பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர ஆயுதப்படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த அணிவகுப்பில் பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

காவலர்களுக்கு உடற்பயிற்சிகள், ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் முறைகள், உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள், யோகா மற்றும் அணிவகுப்பு முறைகள் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...