உடுமலை அருகே பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 19 பேர் காயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வெங்காயம் அறுவடைக்குச் சென்ற 53 பெண் தொழிலாளர்கள் ஏறிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். 6 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அம்மாபட்டி பிரிவு பகுதியில் பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்த விவரம்:



ஆனைமலை தாலுக்காவைச் சேர்ந்த மாமரத்துப்பட்டி, தென்குமாரபாளையம், கொண்டேகவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 53 பெண் தொழிலாளர்கள் போடிபட்டி பகுதியில் வெங்காயம் அறுவடைக்குச் செல்வதற்காக ஒரு சரக்கு வாகனத்தில் பயணித்தனர். அம்மாபட்டி பிரிவு பகுதியில் உள்ள ஒரு வளைவான பாதையில் எதிர்பாராத விதமாக வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



விபத்தில் சிக்கிய அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 19 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மோசமான காயம் அடைந்த 6 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...