உடுமலை அருகே பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 19 பேர் காயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வெங்காயம் அறுவடைக்குச் சென்ற 53 பெண் தொழிலாளர்கள் ஏறிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். 6 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அம்மாபட்டி பிரிவு பகுதியில் பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்த விவரம்:



ஆனைமலை தாலுக்காவைச் சேர்ந்த மாமரத்துப்பட்டி, தென்குமாரபாளையம், கொண்டேகவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 53 பெண் தொழிலாளர்கள் போடிபட்டி பகுதியில் வெங்காயம் அறுவடைக்குச் செல்வதற்காக ஒரு சரக்கு வாகனத்தில் பயணித்தனர். அம்மாபட்டி பிரிவு பகுதியில் உள்ள ஒரு வளைவான பாதையில் எதிர்பாராத விதமாக வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



விபத்தில் சிக்கிய அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 19 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மோசமான காயம் அடைந்த 6 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...