கோவை மாநகராட்சி ஆணையர் தெற்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தெற்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். குடிநீர், பாதாள சாக்கடை, சுகாதார நிலையம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.08.2024) தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

ஆணையர் முதலில் வார்டு எண் 89-ல் கோவைப்புதூர் விரிவாக்கப் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து, வார்டு எண் 98-ல் பாரத் புட்டுவிக்கி சாலை நகர் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.



வார்டு எண் 91-ல் குளத்துப்பாளையம் பாலக்காடு பிரதான சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகளையும் பார்வையிட்டார். குனியமுத்தூர் பகுதியில் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரயில்வே பாதைகளுக்கு மேலே மற்றும் அடியில் பாலம் அமைத்து, குறிச்சி - குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

வார்டு எண் 90-ல் உள்ள கோவைப்புதூர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார். மருந்து மற்றும் மாத்திரைகளின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.



அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடத்தையும் பார்வையிட்டார்.

வார்டு எண் 97-ல் ஈச்சனாரி ஐயப்பா நகரில் பில்லூர் 3 குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணியையும் நேரில் ஆய்வு செய்தார்.



தெற்கு மண்டலத்தில் வார்டு எண் 79-ல் பேரூர் பிரதான சாலை, அண்ணா சிலை அருகில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு எண் 89-ல் சுண்டக்காமுத்தூர் குட்டை,



வார்டு எண் 88-ல் குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றையும் ஆணையர் பார்வையிட்டார்.

மேலும், வார்டு எண் 93-ல் உள்ள இடையர்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியை பார்வையிட்டு, பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி, வசந்தாமணி, முருகேசன், பாபு, இளஞ்சேகரன், செந்தில்குமார், உதயகுமார், அஸ்லாம்பாஷா, உதவி நகர திட்டமிடுநர் விஜயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...