கோவை மாநகராட்சி ஆணையர் தெற்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தெற்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். குடிநீர், பாதாள சாக்கடை, சுகாதார நிலையம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.08.2024) தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

ஆணையர் முதலில் வார்டு எண் 89-ல் கோவைப்புதூர் விரிவாக்கப் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து, வார்டு எண் 98-ல் பாரத் புட்டுவிக்கி சாலை நகர் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.



வார்டு எண் 91-ல் குளத்துப்பாளையம் பாலக்காடு பிரதான சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகளையும் பார்வையிட்டார். குனியமுத்தூர் பகுதியில் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரயில்வே பாதைகளுக்கு மேலே மற்றும் அடியில் பாலம் அமைத்து, குறிச்சி - குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

வார்டு எண் 90-ல் உள்ள கோவைப்புதூர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார். மருந்து மற்றும் மாத்திரைகளின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.



அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடத்தையும் பார்வையிட்டார்.

வார்டு எண் 97-ல் ஈச்சனாரி ஐயப்பா நகரில் பில்லூர் 3 குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணியையும் நேரில் ஆய்வு செய்தார்.



தெற்கு மண்டலத்தில் வார்டு எண் 79-ல் பேரூர் பிரதான சாலை, அண்ணா சிலை அருகில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு எண் 89-ல் சுண்டக்காமுத்தூர் குட்டை,



வார்டு எண் 88-ல் குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றையும் ஆணையர் பார்வையிட்டார்.

மேலும், வார்டு எண் 93-ல் உள்ள இடையர்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியை பார்வையிட்டு, பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி, வசந்தாமணி, முருகேசன், பாபு, இளஞ்சேகரன், செந்தில்குமார், உதயகுமார், அஸ்லாம்பாஷா, உதவி நகர திட்டமிடுநர் விஜயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...