உடுமலையில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா: புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செஞ்சேரி புத்தூர் பகுதியில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செஞ்சேரி புத்தூர் பகுதியில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா தலைவர் சிவசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் மாவட்ட பொருளாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சிவசாமியும், துணைத் தலைவர்களாக முருகன் மற்றும் பொன்னுசாமியும், செயலாளராக சுகுமாரன், இணை செயலாளர்களாக சென்னிமலை ராஜேந்திரன் மற்றும் நடராஜ், பொருளாளராக குணசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், நிர்வாக குழு உறுப்பினர்களாக விஜயலட்சுமி, சரோஜா, வைதேகி, பாலசுந்தரி மற்றும் திருமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



கூட்டத்தில் அமைப்புசாரா துறையில் உள்ள பல்வேறு குளறுபடிகளை சரி செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கேரளாவில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...