உடுமலையில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா: புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செஞ்சேரி புத்தூர் பகுதியில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செஞ்சேரி புத்தூர் பகுதியில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா தலைவர் சிவசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் மாவட்ட பொருளாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சிவசாமியும், துணைத் தலைவர்களாக முருகன் மற்றும் பொன்னுசாமியும், செயலாளராக சுகுமாரன், இணை செயலாளர்களாக சென்னிமலை ராஜேந்திரன் மற்றும் நடராஜ், பொருளாளராக குணசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், நிர்வாக குழு உறுப்பினர்களாக விஜயலட்சுமி, சரோஜா, வைதேகி, பாலசுந்தரி மற்றும் திருமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



கூட்டத்தில் அமைப்புசாரா துறையில் உள்ள பல்வேறு குளறுபடிகளை சரி செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கேரளாவில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...