உடுமலையில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா: புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செஞ்சேரி புத்தூர் பகுதியில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செஞ்சேரி புத்தூர் பகுதியில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா தலைவர் சிவசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் மாவட்ட பொருளாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சிவசாமியும், துணைத் தலைவர்களாக முருகன் மற்றும் பொன்னுசாமியும், செயலாளராக சுகுமாரன், இணை செயலாளர்களாக சென்னிமலை ராஜேந்திரன் மற்றும் நடராஜ், பொருளாளராக குணசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், நிர்வாக குழு உறுப்பினர்களாக விஜயலட்சுமி, சரோஜா, வைதேகி, பாலசுந்தரி மற்றும் திருமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



கூட்டத்தில் அமைப்புசாரா துறையில் உள்ள பல்வேறு குளறுபடிகளை சரி செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கேரளாவில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...