அன்னூர் ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு

அன்னூர் ஒன்றியம், ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. அருணாதேவி தலைவராகவும், மூர்த்தி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


கோவை: அன்னூர் ஒன்றியம், ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் அ.அனிட்டா தலைமை வகித்து, பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தேர்வு நடத்தும் அலுவலராக செயல்பட்டார்.

தேர்வு நடைபெறுவதற்கு முன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், வருகை பதிவு, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், உறுப்பினர் தேர்வுக்கான தகுதிகள் மற்றும் காலஅவகாசம் ஆகியவை பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வு நடைபெற்றது.



தேர்வில் பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய தலைவராக அருணாதேவி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக மூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த தேர்வு நிகழ்வு, பள்ளியின் நிர்வாகத்தில் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பை உறுதி செய்வதோடு, கல்வி மேம்பாட்டிற்கான முக்கிய படியாகவும் கருதப்படுகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...