‘டபுள் டக்கர்-ஏசி, வைபை, டி.வி வசதியுடன் "உதய் எக்ஸ்பிரஸ்" ரயில் டெல்லி- லக்னோ தடத்தில் முதலில் இயக்கம்

இரவு நேரப் பயணத்துக்காக சிறப்பு இரட்டை அடுக்கு (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயிலை ஜூலை மாதம் அறிமுகம் செய்ய ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களான டெல்லி- லக்னோ தடத்தில் இந்த ரயில் முதல்கட்டமாக இயக்கப்படும் எனத் தெரிகிறது.

‘உத்கிரிஷ்சித் டபுள் டக்கர் ஏ.சி. யாத்ரி எக்ஸ்பிரஸ்’ என்ற சொல்லின் சுருக்கமே ‘உதய்’ எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயிலில் படுக்கை வசதிகள் கிடையாது. பயணிகள் வசதியாக அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் சொகுசு இருக்கைகள் இருக்கும். ஒரு பெட்டியில் 120 பயணிகள் அமரலாம். தானியங்கி உணவு வழங்கும் எந்திரங்கள் மூலம் பயணிகள் உணவுகளையும், காபி, தேநீர், குளிர்பானங்களையும் வாங்கி பருகலாம். 

இது குறித்து ரயில்வேத் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், “ உதய் எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் அதிக மக்கள் பயணிக்கும் வழித்தடமான டெல்லி- லக்னோ தடத்தில் இயக்கப்படும். இதற்குக் கட்டணம் 3 அடுக்கு ஏ.சி. கட்டணத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கும்.

அதே சமயம், பயணிகளுக்கு அதிகமான, சிறந்த வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், பயணிகளுக்கு எல்.சி.டி. திரை, பயணிகள் கேட்க வைபை ஸ்பீக்கர்கள், வைபை வசதி போன்றவைகள் இருக்கும். படுக்கை வசதிகள் இல்லாத இந்த இரண்டு அடுக்கு ரயிலில் இரவு நேரத்தில் இயக்கப்படும். பயணிகளுக்கு படுக்கை வசதி இல்லாத போதிலும், வசதியாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதியாக காலை நீட்டிக் கொள்ளும் வகையில் இட வசதி, நவீன வடிவமைப்பில் வண்ணமயமான பெட்டிகள், பயோ- கழிப்பறைகள் கொண்டதா இருக்கும். மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இந்த ரயில் செல்லும்’’ எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...