பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட நெறையூர் கிராம மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட சடையாபாளையம் பஞ்சாயத்தின் எல்லைக்குள் உள்ள நெறையூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



பல ஆண்டுகளாக கிராமத்தில் குடிநீர் வசதி, தண்ணீர் சேமிப்பு தொட்டி, சாலை வசதி, போக்குவரத்து வசதி, இடுகாடு வசதி மற்றும் நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் செய்யப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.



குடிநீர் வசதி இல்லாததால், 20 லிட்டர் கேன்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கூட வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, “அடிப்படை வசதிகள் இல்லையெனில் தேர்தல் வேண்டாம்” எனக் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால்தான் இயல்பான வாழ்க்கை நடத்த முடியும். தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நெறையூர் கிராமத்தை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...