பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன.


கோவை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒருபகுதியாக, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டன.



2026 சட்டமன்றத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொள்ளாச்சி சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ணசாமி மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...