ஜிலோப்பிநாயக்கன் பாளையம் கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணி துவக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலோப்பிநாயக்கன் பாளையத்தில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் துவங்கின. முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலோப்பிநாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் இன்று துவங்கின. இப்பணிகளை மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவருமான ஜெயராமகிருஷ்ணன் பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பாபு, உடுமலை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செழியன், உடுமலை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராம், ரெட்டியபாளையம் ஊர்த் தலைவர் மோகன், ஜிலோப்பிநாயக்கன் பாளையம் ஊர்த் தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஜிலோப்பிநாயக்கன் பாளையம் திமுக கிளைச் செயலாளர் ஜெயக்குமார், கிளை துணைச் செயலாளர் ஆனந்த் ஆகியோரும் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகளான மயில்சாமி, ரவி, ராம்ராஜ், ராஜ் (எ) கருப்புசாமி, தங்கவேல், லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இக்கோவில் சீரமைப்பு பணிகள் மூலம் பழமையான இக்கோவிலின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு சிறந்த வழிபாட்டு சூழல் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...