ஜிலோப்பிநாயக்கன் பாளையம் கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணி துவக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலோப்பிநாயக்கன் பாளையத்தில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் துவங்கின. முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலோப்பிநாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் இன்று துவங்கின. இப்பணிகளை மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவருமான ஜெயராமகிருஷ்ணன் பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பாபு, உடுமலை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செழியன், உடுமலை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராம், ரெட்டியபாளையம் ஊர்த் தலைவர் மோகன், ஜிலோப்பிநாயக்கன் பாளையம் ஊர்த் தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஜிலோப்பிநாயக்கன் பாளையம் திமுக கிளைச் செயலாளர் ஜெயக்குமார், கிளை துணைச் செயலாளர் ஆனந்த் ஆகியோரும் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகளான மயில்சாமி, ரவி, ராம்ராஜ், ராஜ் (எ) கருப்புசாமி, தங்கவேல், லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இக்கோவில் சீரமைப்பு பணிகள் மூலம் பழமையான இக்கோவிலின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு சிறந்த வழிபாட்டு சூழல் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...