கோவை: நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஆம்னி வேன் மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை அவினாசி சாலையில் தண்டு மாரியம்மன் கோவில் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தம்பதியினர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.



Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 13ஆம் தேதி நடந்துள்ளது.



அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டு மாரியம்மன் கோவில் முன்பாக கேரள மாநில பதிவெண் கொண்ட மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.



அப்போது வேகமாக வந்த ஆம்னி வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதியது. இந்த மோதலில் ஆம்னி வேனின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.



விபத்தைக் கண்ட உடனேயே அருகில் இருந்தவர்கள் ஆம்னி வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர முயற்சிக்குப் பிறகு, வேனில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகியோர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளில் வேகமாக வந்த ஆம்னி வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...