மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நெகிழ்ச்சி காட்சி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997-1999 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்கள் ஆசிரியர்களை கௌரவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 1997, 1998, 1999 ஆம் ஆண்டுகளில் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பள்ளியின் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் பயின்ற சுமார் 300க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில், அந்த ஆண்டுகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் போது, தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற முன்னாள் மாணவர்களின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.



பின்னர், ஆசிரியர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மாணவர்கள், "எங்களுக்கு பாடம் கற்பித்து, நல்வழிப்படுத்திய ஆசிரியப் பெருமக்களை இன்று கௌரவிப்பதில் பெருமை அடைகிறோம். வரும் தலைமுறையினரும் இதே போல ஆசிரியர்களை கௌரவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் பெற்றோரை மதிப்பது போல, தனக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை எந்நாளும் மறக்கக் கூடாது," என்று தெரிவித்தனர்.

மேலும், "25 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் ஒன்று கூடி பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்," என்றும் அவர்கள் கூறினர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆசிரியர்கள் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் ஆசீர்வாதம் வாங்கிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது எனலாம்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...