மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நெகிழ்ச்சி காட்சி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997-1999 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்கள் ஆசிரியர்களை கௌரவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 1997, 1998, 1999 ஆம் ஆண்டுகளில் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பள்ளியின் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் பயின்ற சுமார் 300க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில், அந்த ஆண்டுகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் போது, தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற முன்னாள் மாணவர்களின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.



பின்னர், ஆசிரியர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மாணவர்கள், "எங்களுக்கு பாடம் கற்பித்து, நல்வழிப்படுத்திய ஆசிரியப் பெருமக்களை இன்று கௌரவிப்பதில் பெருமை அடைகிறோம். வரும் தலைமுறையினரும் இதே போல ஆசிரியர்களை கௌரவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் பெற்றோரை மதிப்பது போல, தனக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை எந்நாளும் மறக்கக் கூடாது," என்று தெரிவித்தனர்.

மேலும், "25 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் ஒன்று கூடி பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்," என்றும் அவர்கள் கூறினர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆசிரியர்கள் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் ஆசீர்வாதம் வாங்கிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது எனலாம்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...