உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் வாகன பேரணி

உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி ஆகியோரின் அறிவுரைப்படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.



குட்டைதிடல் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி வாகன பேரணியை துவக்கி வைத்தார்.



பேரணி குட்டைதிடலில் துவங்கி, சதாசிவம் வீதி, நெல்லுக்கடை வீதி, பொள்ளாச்சி ரோடு வழியாக சென்றது.



பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.



பின்னர் தளி ரோடு ரயில்வே மேம்பாலம் வழியாக மீண்டும் குட்டைதிடலில் பேரணி நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பார்வையாளர் பி என் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் ராதிகா, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட பிரச்சார அணி செயலாளர் சின்ராஜ், நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நகர செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...