உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் வாகன பேரணி

உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி ஆகியோரின் அறிவுரைப்படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.



குட்டைதிடல் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி வாகன பேரணியை துவக்கி வைத்தார்.



பேரணி குட்டைதிடலில் துவங்கி, சதாசிவம் வீதி, நெல்லுக்கடை வீதி, பொள்ளாச்சி ரோடு வழியாக சென்றது.



பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.



பின்னர் தளி ரோடு ரயில்வே மேம்பாலம் வழியாக மீண்டும் குட்டைதிடலில் பேரணி நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பார்வையாளர் பி என் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் ராதிகா, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட பிரச்சார அணி செயலாளர் சின்ராஜ், நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நகர செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...