கோவை கூடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம்: 184 பயனாளிகளுக்கு ரூ.6.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கோவை கூடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. 184 பயனாளிகளுக்கு ரூ.6.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளின் கண்காட்சிகளும் இடம்பெற்றன.


Coimbatore: கோவை கூடலூர் நகராட்சி கேஸ் கம்பெனி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு வாழ்த்துரை வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையேற்று மருத்துவத்துறை, தோட்டக்கலை, மகளிர் சுய உதவிக்குழுவினர், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அமைத்திருந்த கண்காட்சிகளை பார்வையிட்டார்.



நிகழ்வில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் முன்னிலை வகித்து பேசினார். அவர் தனது உரையில், கூடலூர் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல கிராமங்கள் மலையிட பாதுகாப்பு குழும கட்டுப்பாட்டில் உள்ளதால் (அ கா - கிராமங்கள்) அங்குள்ள இடங்கள் மற்றும் வீடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுவதாகக் கூறினார். இந்த நிலையை மாற்றி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பேசுகையில், மலையடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்காக வீட்டுவசதி துறை அமைச்சர் ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 300 சதுர அடி வரை வீடு கட்ட தற்போது அ.கா தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகைப் பதிவு 90 சதவீதமாக உள்ளதை குறைந்தது 95 சதவீதமாக உயர்த்த பெற்றோர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றில் வருவாய் துறையின் இலவச வீட்டுமனை பட்டா, ஆதி திராவிடர் நலத்துறையின் தனிநபர் வன அலுவலக உரிமை பட்டா, தையல் எந்திரம், குடும்ப அட்டை, மகளிர் திட்டத்தின் கீழ் சுய உதவி குழுவினருக்கான உதவிகள், தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை மானியங்கள், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், மகப்பேறு கால ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை அடங்கும். மொத்தம் 184 பயனாளிகளுக்கு சுமார் ரூபாய் 6 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் முடிவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் மனோகரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...