பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் நீர்ப்பாசன கண்காணிப்புக் குழு கூட்டம்

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. நீர் திருட்டை தடுக்க பல்வேறு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டத்திற்கு விரைவில் திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு நான்கு சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடை மடைக்கு நீர் செல்வதை முறைப்படுத்துவது மற்றும் நீர் திருட்டை தடுப்பது குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இன்று (09.08.2024) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்திரின் சரண்யா, இ.ஆ.ப., தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் தாலுகா பகுதிகளுக்கும், கடைமடை பகுதியான வெள்ளக்கோவில், குண்டடம் மற்றும் உடுமலை பகுதிக்கு பாசன நீர் முறையாக செல்ல வேண்டியும், நீர் திருட்டை தடுக்கவும் நீர்வளத்துறையினருக்கு சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், தண்ணீர் திருடப்படும் பகுதியில் மின்சாரம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கவும், கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடும் காலங்களில் காவல்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது. தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

Newsletter

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...