பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் நீர்ப்பாசன கண்காணிப்புக் குழு கூட்டம்

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. நீர் திருட்டை தடுக்க பல்வேறு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டத்திற்கு விரைவில் திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு நான்கு சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடை மடைக்கு நீர் செல்வதை முறைப்படுத்துவது மற்றும் நீர் திருட்டை தடுப்பது குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இன்று (09.08.2024) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்திரின் சரண்யா, இ.ஆ.ப., தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் தாலுகா பகுதிகளுக்கும், கடைமடை பகுதியான வெள்ளக்கோவில், குண்டடம் மற்றும் உடுமலை பகுதிக்கு பாசன நீர் முறையாக செல்ல வேண்டியும், நீர் திருட்டை தடுக்கவும் நீர்வளத்துறையினருக்கு சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், தண்ணீர் திருடப்படும் பகுதியில் மின்சாரம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கவும், கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடும் காலங்களில் காவல்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது. தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...