கோவையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 285 வழக்குகள் பதிவு

கோவை மாநகரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 285 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் தலைகவசம் அணியாத 2456 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகரில் விபத்து குறைப்பு தொடர் நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் கோவை மாநகர காவல் துறை சார்பாக கடந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவை மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு காவல்துறையினரால் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் தலைகவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டிய வாகன ஓட்டுநர்கள் மீது கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 285 வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டது.

மேலும், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2456 வழக்குகள் பதிவு செய்து அபராதத் தொகையாக ரூ.2 லட்சத்த 45 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இனிவரும் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்கச் செய்து அவற்றை "விபத்தில்லா வார இறுதி நாட்களாக்க" நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...