பொள்ளாச்சி தொகுதியில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, தொகுதியில் சுரங்கப்பாதை, மேம்பாலம் மற்றும் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.


Coimbatore: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு 08.08.2024 அன்று நடைபெற்றது. இதில் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள பல்வேறு சாலைப் பிரச்சினைகளை எடுத்துரைத்து, அவற்றுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

அவரது முக்கிய கோரிக்கைகள்:

1. உடுமலை - பழனி சாலையில் பஞ்சாபி தாபா சந்திப்பில் புதிய கீழ்பாலம் (சுரங்கப்பாதை) அமைக்க வேண்டும்.

2. வேடபட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

3. பொள்ளாச்சி - உடுமலை நெடுஞ்சாலையில், அமுதசுரபி உணவகம் முதல் மரப்பேட்டை சந்திப்பு வரை, மெயின்ரோடு மற்றும் சர்வீஸ் ரோடு இடையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மீடியன்களை அகற்ற வேண்டும்.

இந்த கோரிக்கைகள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து, நேரடியாக அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி.

இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், பொள்ளாச்சி தொகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயணிகளின் நேரம் மிச்சப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...