பொள்ளாச்சி தொகுதியில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, தொகுதியில் சுரங்கப்பாதை, மேம்பாலம் மற்றும் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.


Coimbatore: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு 08.08.2024 அன்று நடைபெற்றது. இதில் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள பல்வேறு சாலைப் பிரச்சினைகளை எடுத்துரைத்து, அவற்றுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

அவரது முக்கிய கோரிக்கைகள்:

1. உடுமலை - பழனி சாலையில் பஞ்சாபி தாபா சந்திப்பில் புதிய கீழ்பாலம் (சுரங்கப்பாதை) அமைக்க வேண்டும்.

2. வேடபட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

3. பொள்ளாச்சி - உடுமலை நெடுஞ்சாலையில், அமுதசுரபி உணவகம் முதல் மரப்பேட்டை சந்திப்பு வரை, மெயின்ரோடு மற்றும் சர்வீஸ் ரோடு இடையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மீடியன்களை அகற்ற வேண்டும்.

இந்த கோரிக்கைகள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து, நேரடியாக அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி.

இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், பொள்ளாச்சி தொகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயணிகளின் நேரம் மிச்சப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...