ஒடிசாவிலிருந்து கோவைக்கு கஞ்சா கடத்தல்: 7 பேர் கைது

கோவை ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சாவுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒடிசாவிலிருந்து கோவைக்கு கடத்தி வந்த இவர்கள், விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு வந்தது தெரியவந்தது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மதுவிலக்கு பிரிவு காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான காவலர்கள் கோவை ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லங்கா கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, அவர்களின் பையில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சாகு (34), டிரேந்தர் பெர்க்ரா (24), ரஞ்சித நாயக் (23), பிரசாந்த் தாகூர் (36), சாகர் முகாரி (57), நரேந்திர திரிபாதி (30), பல்தே ஜிபிலா (20) என்பது தெரியவந்தது. மேலும், கஞ்சாவை விற்பனை செய்ய ஒடிசாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஏழு பேரையும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஆறு செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...