கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது

கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த விஸ்வதர்சினி என்ற பெண்ணை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.


Coimbatore: கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (57) என்பவர் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்து வந்தார். இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியைச் சேர்ந்த விஸ்வதர்சினி (48) என்பவருடன் அறிமுகமானார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது.

2020ஆம் ஆண்டு, விஸ்வதர்சினி தனது மகன் வெளிநாட்டுக் கல்லூரியில் படிப்பதற்காக 10 லட்ச ரூபாய் தேவை என்றும், தன்னிடம் 8 லட்ச ரூபாய் இருப்பதாகவும், மீதி 2 லட்ச ரூபாய் வேண்டும் என்றும் முத்துராமலிங்கத்திடம் கேட்டார். முத்துராமலிங்கம் 2 லட்ச ரூபாய் கொடுத்தார். ஆனால் விஸ்வதர்சினி பணத்தைத் திருப்பித் தரவில்லை மற்றும் திருமணமும் செய்யவில்லை.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் முத்துராமலிங்கம் புகார் அளித்தார். விசாரணையில், விஸ்வதர்சினி மீது சென்னை ராயப்பேட்டை மகளிர் போலீசிலும் இதே போன்ற ஒரு வழக்கு பதிவாகியிருந்தது தெரியவந்தது. மேலும், செல்வபுரத்தில் மோசடி வழக்கும், வடவள்ளி போலீஸ் நிலையத்தில் மிரட்டல் வழக்கும் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த விஸ்வதர்சினியை, முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் தேடி வந்தனர். ஆகஸ்ட் 1 இரவு பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...