கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது

கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த விஸ்வதர்சினி என்ற பெண்ணை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.


Coimbatore: கோவையில் திருமணம் செய்வதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (57) என்பவர் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்து வந்தார். இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியைச் சேர்ந்த விஸ்வதர்சினி (48) என்பவருடன் அறிமுகமானார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது.

2020ஆம் ஆண்டு, விஸ்வதர்சினி தனது மகன் வெளிநாட்டுக் கல்லூரியில் படிப்பதற்காக 10 லட்ச ரூபாய் தேவை என்றும், தன்னிடம் 8 லட்ச ரூபாய் இருப்பதாகவும், மீதி 2 லட்ச ரூபாய் வேண்டும் என்றும் முத்துராமலிங்கத்திடம் கேட்டார். முத்துராமலிங்கம் 2 லட்ச ரூபாய் கொடுத்தார். ஆனால் விஸ்வதர்சினி பணத்தைத் திருப்பித் தரவில்லை மற்றும் திருமணமும் செய்யவில்லை.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் முத்துராமலிங்கம் புகார் அளித்தார். விசாரணையில், விஸ்வதர்சினி மீது சென்னை ராயப்பேட்டை மகளிர் போலீசிலும் இதே போன்ற ஒரு வழக்கு பதிவாகியிருந்தது தெரியவந்தது. மேலும், செல்வபுரத்தில் மோசடி வழக்கும், வடவள்ளி போலீஸ் நிலையத்தில் மிரட்டல் வழக்கும் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த விஸ்வதர்சினியை, முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் தேடி வந்தனர். ஆகஸ்ட் 1 இரவு பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...