கோவை பெட்ரோல் பங்கில் மோசடி: பணம் கொடுக்காமல் தப்பிய கார் ஓட்டுநர்

கோவை புட்டுவிக்கியில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்கில் ஆகஸ்ட் 1 அன்று ஒரு கார் ஓட்டுநர் ₹3,000 மதிப்புள்ள பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


கோவை: கோவை புட்டுவிக்கி பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்கில் ஒரு கார் ஓட்டுநர் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி மதியம், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஸ்விஃப்ட் காரில் பெட்ரோல் பங்கிற்கு வந்தார்.



அங்கிருந்த பெண் ஊழியரிடம் 3,000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பும்படி கேட்டுக்கொண்டார்.

பெட்ரோல் நிரப்பப்பட்ட பின்னர், எதிர்பாராத விதமாக அந்த நபர் பணம் செலுத்தாமலேயே காரை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பிச் சென்றார்.



பங்கின் ஊழியர் உடனடியாக கூச்சலிட்டு பின்தொடர்ந்தார், ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது.

சக ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் அந்த காரை துரத்திச் சென்றனர். ஆனால், அதற்குள் கார் ஓட்டிய நபர் தப்பித்துச் சென்றுவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் பெட்ரோல் பங்கின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மோசடி செய்த நபரை கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...