விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி, கள் இறக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாநில தலைவர் AS பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு ஆதார விலை இல்லாததால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என்றும், விவசாயிகள் விவசாய தோட்ட பத்திரங்களை அடமானம் வைத்து விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, மத்திய மாநில அரசுகள் வழங்கிய கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கடன் பெறும் விவசாயிகளிடம் கடன் தொகையை திருப்பி கேட்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். மேலும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தின் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...