கோவையில் SDTU மண்டல மாநாடு: பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்க வலியுறுத்தல்

கோவையில் செப்டம்பர் 22 அன்று SDTU மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் திரும்பப்பெறுதல், பொதுத்துறை நிறுவனங்கள் மீட்பு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.



Coimbatore: சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (SDTU) சார்பில் கோவையில் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் லோகோ வெளியீட்டு விழா கோவை மாவட்ட SDPI அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஸ்தார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் வலியுறுத்தப்படும் முக்கிய கோரிக்கைகளாக, புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை மீட்டு அரசே நடத்துதல், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட 6 அம்சங்கள் அடங்கும். இந்த மாநாடு செப்டம்பர் 22 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

ரவூப்நிஸ்தார் பேசுகையில், "மோடி அரசு தொழிலாளர் விரோத போக்குடன் பல சட்டங்களை திருத்தியுள்ளது. 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்," என்றார்.

மேலும், "தமிழகத்தில் 56 இடங்களில் SEZ அமைக்கப்பட்டுள்ளது. இவை தொழிலாளர்களை பாதிக்காத வகையிலும், இயற்கைக்கு இடையூறு இல்லாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் கோவை மண்டலத்தின் சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து பேசுகையில், "முந்தைய அரசுகள் 360 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கின. ஆனால் தற்போதைய அரசு 60 நிறுவனங்களை தனியாருக்கு விற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்காமல் புதியவற்றை உருவாக்க வேண்டும்," என்றார்.

வேலையில்லா பிரச்சினை குறித்து, "CMIE அறிக்கையின்படி 48% இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வேலையில்லா திண்டாட்டம் இருக்கக் கூடாது," என்று வலியுறுத்தினார்.

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்," என்றார்.

மாநாட்டில் 4000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டணி கட்சிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...