கோவையில் SDTU மண்டல மாநாடு: பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்க வலியுறுத்தல்

கோவையில் செப்டம்பர் 22 அன்று SDTU மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் திரும்பப்பெறுதல், பொதுத்துறை நிறுவனங்கள் மீட்பு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.



Coimbatore: சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (SDTU) சார்பில் கோவையில் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் லோகோ வெளியீட்டு விழா கோவை மாவட்ட SDPI அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஸ்தார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் வலியுறுத்தப்படும் முக்கிய கோரிக்கைகளாக, புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை மீட்டு அரசே நடத்துதல், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட 6 அம்சங்கள் அடங்கும். இந்த மாநாடு செப்டம்பர் 22 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

ரவூப்நிஸ்தார் பேசுகையில், "மோடி அரசு தொழிலாளர் விரோத போக்குடன் பல சட்டங்களை திருத்தியுள்ளது. 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்," என்றார்.

மேலும், "தமிழகத்தில் 56 இடங்களில் SEZ அமைக்கப்பட்டுள்ளது. இவை தொழிலாளர்களை பாதிக்காத வகையிலும், இயற்கைக்கு இடையூறு இல்லாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் கோவை மண்டலத்தின் சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து பேசுகையில், "முந்தைய அரசுகள் 360 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கின. ஆனால் தற்போதைய அரசு 60 நிறுவனங்களை தனியாருக்கு விற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்காமல் புதியவற்றை உருவாக்க வேண்டும்," என்றார்.

வேலையில்லா பிரச்சினை குறித்து, "CMIE அறிக்கையின்படி 48% இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வேலையில்லா திண்டாட்டம் இருக்கக் கூடாது," என்று வலியுறுத்தினார்.

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்," என்றார்.

மாநாட்டில் 4000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டணி கட்சிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...