கோவையில் SDTU மண்டல மாநாடு: பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்க வலியுறுத்தல்

கோவையில் செப்டம்பர் 22 அன்று SDTU மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் திரும்பப்பெறுதல், பொதுத்துறை நிறுவனங்கள் மீட்பு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.



Coimbatore: சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (SDTU) சார்பில் கோவையில் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் லோகோ வெளியீட்டு விழா கோவை மாவட்ட SDPI அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஸ்தார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் வலியுறுத்தப்படும் முக்கிய கோரிக்கைகளாக, புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை மீட்டு அரசே நடத்துதல், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட 6 அம்சங்கள் அடங்கும். இந்த மாநாடு செப்டம்பர் 22 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

ரவூப்நிஸ்தார் பேசுகையில், "மோடி அரசு தொழிலாளர் விரோத போக்குடன் பல சட்டங்களை திருத்தியுள்ளது. 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்," என்றார்.

மேலும், "தமிழகத்தில் 56 இடங்களில் SEZ அமைக்கப்பட்டுள்ளது. இவை தொழிலாளர்களை பாதிக்காத வகையிலும், இயற்கைக்கு இடையூறு இல்லாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் கோவை மண்டலத்தின் சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து பேசுகையில், "முந்தைய அரசுகள் 360 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கின. ஆனால் தற்போதைய அரசு 60 நிறுவனங்களை தனியாருக்கு விற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்காமல் புதியவற்றை உருவாக்க வேண்டும்," என்றார்.

வேலையில்லா பிரச்சினை குறித்து, "CMIE அறிக்கையின்படி 48% இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வேலையில்லா திண்டாட்டம் இருக்கக் கூடாது," என்று வலியுறுத்தினார்.

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்," என்றார்.

மாநாட்டில் 4000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டணி கட்சிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...