கேரள வெள்ளப் பாதிப்பு: கோவை மாநகராட்சி மீட்பு உபகரணங்களை அனுப்பி வைத்தது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் தலைமையில் மீட்பு வாகனங்கள் மற்றும் குளிர் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.


Coimbatore: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயமுத்தூர் மாவட்டத்தின் சார்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில், மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர் பெட்டிகளை (Freezer Box) மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப அவர்கள் நேற்று (30.07.2024) நள்ளிரவு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், தெற்கு மண்டல குழு தலைவர் தனலட்சுமி, துணை ஆணையர் க. சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சபரி ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பாபு, அஸ்லாம் பாஷா, இளஞ்சேகரன், ராஜலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்த முயற்சி கேரளாவின் வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாநகராட்சியின் இந்த உதவி, மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமையையும், பேரிடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...