கோவை சிங்காநல்லூர் அருகே செல்போன் பேசியபடி சென்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு

கோவை சிங்காநல்லூர் அருகே, செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்த 22 வயது இளைஞர் அஸ்வின் குமார், ரயில் மோதி உயிரிழந்தார். காதில் இயர்போன் அணிந்திருந்தது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


கோவை: கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே உள்ள தண்டவாளத்தில் இன்று (ஜூலை 30) காலை, இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தொடக்கத்தில் இறந்தவரின் அடையாளம் தெரியவில்லை. ஆனால் தண்டவாளம் அருகில் கிடந்த ஒரு மணிப்பர்ஸ் மற்றும் ஏடிஎம் கார்டின் மூலம், கோவையில் உள்ள வங்கியுடன் தொடர்பு கொண்டு கணக்கு வைத்திருப்பவரின் பெயரை உறுதி செய்தனர். இதன் மூலம் இறந்த இளைஞர் கோவை சௌரிபாளையத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார் (22) என்பது தெரிய வந்தது.

விசாரணையில், அஸ்வின் குமார் அன்று காலை காதில் இயர்போன் அணிந்து கொண்டு செல்போனில் பேசியபடி சென்றபோது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் அஸ்வின் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காதில் இயர்போனை அணிந்து கொண்டு பேசியபடி சென்ற இளைஞர் ரயில் மோதி இறந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...