கோவை இருகூர் பகுதியில் மனைவியை அரிவாளால் தாக்கிய தொழிலாளி கைது

கோவை இருகூர் அருகே, மது வாங்க பணம் கேட்டு மறுப்பு தெரிவித்த மனைவியை அரிவாளால் தாக்கிய தொழிலாளி சம்பத்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Coimbatore: கோவை இருகூர் மருதாச்சல தெருவைச் சேர்ந்த சம்பத்குமார் (40) என்ற கூலித் தொழிலாளி, தனது மனைவியை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மது பழக்கம் உடைய சம்பத்குமார், ஜூலை 27 அன்று தனது மனைவி ரத்தின பிரியாவிடம் (33) மது வாங்குவதற்கு பணம் கேட்டார்.

ரத்தின பிரியா பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சம்பத்குமார், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அடித்து உதைத்தார். மேலும், அரிவாளால் தாக்கியதில் ரத்தின பிரியாவின் கையில் காயம் ஏற்பட்டது.

சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் ரத்தின பிரியாவை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பத்குமாரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சம்பத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...