வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கூட்டத்தில், வணிகர்கள் கொலை மற்றும் கடைகளில் கொள்ளை அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்தனர். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு.


Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சௌந்தர்ராஜன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அவர்கள் தெரிவித்ததாவது, "கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ரவுடிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூரில் ஒரு வணிகர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதால், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."



"மேலும், GST அதிகாரிகள் வணிகர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்," என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடைகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர். "இதனைத் தடுக்க, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் பணிபுரிபவர்களின் ஆதார் தரவை தமிழக காவல்துறைக்கு வழங்க வேண்டும். இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்," என்று அவர்கள் வலியுறுத்தினர்.



"இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தமிழக அரசு விரைவாக தீர்க்க வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்," என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...