வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கூட்டத்தில், வணிகர்கள் கொலை மற்றும் கடைகளில் கொள்ளை அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்தனர். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு.


Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சௌந்தர்ராஜன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அவர்கள் தெரிவித்ததாவது, "கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ரவுடிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூரில் ஒரு வணிகர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதால், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."



"மேலும், GST அதிகாரிகள் வணிகர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்," என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடைகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர். "இதனைத் தடுக்க, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் பணிபுரிபவர்களின் ஆதார் தரவை தமிழக காவல்துறைக்கு வழங்க வேண்டும். இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்," என்று அவர்கள் வலியுறுத்தினர்.



"இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தமிழக அரசு விரைவாக தீர்க்க வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்," என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...