கோவை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஆய்வு

கோவை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஜூலை 26ஆம் தேதி ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (ICCC) செயல்பாடுகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் IAS நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அமைந்துள்ள இந்த மையத்திற்கு ஜூலை 26ஆம் தேதி விஜயம் செய்த ஆனந்த் மோகன், மையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS உடனிருந்தார்.



ஆய்வின் போது துணை ஆணையாளர் K. சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், நகர்நல அலுவலர் (பொ) Dr. பூபதி, உதவி ஆணையர் சந்தியா ஆகியோர் உடனிருந்தனர். மேலும், மண்டல சுகாதார அலுவலர்களான குணசேகரன், இராமச்சந்திரன், திருமால் மற்றும் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.



ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) என்பது நகரின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் மையமாக செயல்படுகிறது. இது நகர நிர்வாகத்தை மேம்படுத்தவும், குடிமக்களுக்கான சேவைகளை திறம்பட வழங்கவும் உதவுகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட ஆனந்த் மோகன், அதன் பயன்பாடு குறித்து விரிவாக கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...