கோவை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஆய்வு

கோவை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஜூலை 26ஆம் தேதி ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (ICCC) செயல்பாடுகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் IAS நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அமைந்துள்ள இந்த மையத்திற்கு ஜூலை 26ஆம் தேதி விஜயம் செய்த ஆனந்த் மோகன், மையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS உடனிருந்தார்.



ஆய்வின் போது துணை ஆணையாளர் K. சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், நகர்நல அலுவலர் (பொ) Dr. பூபதி, உதவி ஆணையர் சந்தியா ஆகியோர் உடனிருந்தனர். மேலும், மண்டல சுகாதார அலுவலர்களான குணசேகரன், இராமச்சந்திரன், திருமால் மற்றும் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.



ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) என்பது நகரின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் மையமாக செயல்படுகிறது. இது நகர நிர்வாகத்தை மேம்படுத்தவும், குடிமக்களுக்கான சேவைகளை திறம்பட வழங்கவும் உதவுகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட ஆனந்த் மோகன், அதன் பயன்பாடு குறித்து விரிவாக கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...