கோவை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஆய்வு

கோவை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஜூலை 26ஆம் தேதி ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (ICCC) செயல்பாடுகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் IAS நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அமைந்துள்ள இந்த மையத்திற்கு ஜூலை 26ஆம் தேதி விஜயம் செய்த ஆனந்த் மோகன், மையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS உடனிருந்தார்.



ஆய்வின் போது துணை ஆணையாளர் K. சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், நகர்நல அலுவலர் (பொ) Dr. பூபதி, உதவி ஆணையர் சந்தியா ஆகியோர் உடனிருந்தனர். மேலும், மண்டல சுகாதார அலுவலர்களான குணசேகரன், இராமச்சந்திரன், திருமால் மற்றும் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.



ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) என்பது நகரின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் மையமாக செயல்படுகிறது. இது நகர நிர்வாகத்தை மேம்படுத்தவும், குடிமக்களுக்கான சேவைகளை திறம்பட வழங்கவும் உதவுகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட ஆனந்த் மோகன், அதன் பயன்பாடு குறித்து விரிவாக கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...