துடியலூர் அருகே வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளை

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது. குடும்பம் திருப்பதி சென்றிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கிடைத்த விவரங்களின்படி, துடியலூர் அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (70). இவர், கடந்த ஜூலை 23ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார். பின்னர் அங்கிருந்து ஜூலை 25ஆம் தேதி கோவை திரும்பினர்.

வீட்டிற்கு திரும்பிய பக்தவச்சலம், கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, உடைமைகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த தங்க வளையல், செயின், பிரேஸ்லெட் உள்ளிட்ட 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் குறித்து பக்தவச்சலம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...