சூலூரில் ரூ.500 கோடி முதலீட்டில் புதிய மின்சார பைக் உற்பத்தி நிறுவனம் தொடக்கம்

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சூலூரில் ரூ.500 கோடி முதலீட்டில் ஸ்ரீவரு என்ற மின்சார பைக் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூரில் ரூ.500 கோடி முதலீட்டில் புதிய மின்சார பைக் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவரு என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மின்சார பைக் உற்பத்தி நிறுவனத்தை சிங்கப்பூர் தொழிலதிபர் ஆன்றுலியோ மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் செல்வராஜ் கிருஷ்ணன் ஆகியோர் ஜூலை 25 அன்று திறந்து வைத்தனர்.

இந்த நிறுவனம் உயர் செயல் திறன் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மின்சார பைக்குகளை உருவாக்கும் என நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது தமிழகத்தில் மின்சார வாகனத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பேசிய தொழிலதிபர் ஆண்ட்ருலியோ, "தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று உலக தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தொழில் துவங்க விரும்புகின்றனர். அந்த வகையில் ஸ்ரீவரு மோட்டார்ஸ் நிறுவனமும் தமிழகத்தில் தொழில் துவங்கியதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.

இந்த புதிய மின்சார பைக் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டதன் மூலம், சூலூர் பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...