பொள்ளாச்சியில் பிரதான குழாய் உடைப்பு: பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

பொள்ளாச்சியில் விஜயபுரம் அருகே பிரதான குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் விஜயபுரம், ரத்தினசபாபதிபுரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி நகரத்தில் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட மகாலிங்கபுரம் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைந்துள்ளன. அம்பராம்பாளையம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, பெரிய குழாய்கள் மூலம் இந்த தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள விஜயபுரம், ரத்தினசபாபதிபுரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது, விஜயபுரம் அருகே செல்லும் பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.



இந்த உடைப்பின் காரணமாக சுமார் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு கிளம்பியது. இதனால் சாலையில் தண்ணீர் ஆறு போல ஓடியது.



அருகில் இருந்த பொதுமக்கள் நகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஆனால், நீண்ட நேரம் கழித்தே அதிகாரிகள் வந்ததால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது.

இந்த உடைப்பின் காரணமாக விஜயபுரம், ரத்தினசபாபதிபுரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குடிநீர் வினியோகத்தை விரைவில் சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...