பொள்ளாச்சியில் பிரதான குழாய் உடைப்பு: பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

பொள்ளாச்சியில் விஜயபுரம் அருகே பிரதான குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் விஜயபுரம், ரத்தினசபாபதிபுரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி நகரத்தில் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட மகாலிங்கபுரம் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைந்துள்ளன. அம்பராம்பாளையம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, பெரிய குழாய்கள் மூலம் இந்த தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள விஜயபுரம், ரத்தினசபாபதிபுரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது, விஜயபுரம் அருகே செல்லும் பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.



இந்த உடைப்பின் காரணமாக சுமார் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு கிளம்பியது. இதனால் சாலையில் தண்ணீர் ஆறு போல ஓடியது.



அருகில் இருந்த பொதுமக்கள் நகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஆனால், நீண்ட நேரம் கழித்தே அதிகாரிகள் வந்ததால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது.

இந்த உடைப்பின் காரணமாக விஜயபுரம், ரத்தினசபாபதிபுரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குடிநீர் வினியோகத்தை விரைவில் சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...