சூலூரில் சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரிக்கை: ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு அளித்துள்ளது. 9 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டம் நடத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் வட்டத்தில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகே உள்ள சூலூர் கிராம புலா எண். 704/5 (பழைய புல எண். 422/15) நெகாலை 400 சதுர மீட்டர் (10 சென்ட்) சர்க்கார் புறம்போக்கு நத்தம் இடத்தில் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகமும், வருவாய் கோட்டாட்சியர் தெற்கு அவர்களும் கடந்த 18.10.2023 அன்று உத்தரவிட்டனர்.



ஆனால், 9 மாதங்கள் கடந்தும் இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக சூலூர் பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து, சர்ச்சைக்குரிய இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமலும், வாகனங்களை நிறுத்தாமலும், கடைகளை அமைக்காமலும் இருக்க உடனடியாக வேலி அமைக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மேலும், வேலி அமைக்கும் போது பாதுகாப்பு வழங்கி ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரி காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ளார்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...