சூலூரில் சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரிக்கை: ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு அளித்துள்ளது. 9 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டம் நடத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் வட்டத்தில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகே உள்ள சூலூர் கிராம புலா எண். 704/5 (பழைய புல எண். 422/15) நெகாலை 400 சதுர மீட்டர் (10 சென்ட்) சர்க்கார் புறம்போக்கு நத்தம் இடத்தில் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகமும், வருவாய் கோட்டாட்சியர் தெற்கு அவர்களும் கடந்த 18.10.2023 அன்று உத்தரவிட்டனர்.



ஆனால், 9 மாதங்கள் கடந்தும் இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக சூலூர் பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து, சர்ச்சைக்குரிய இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமலும், வாகனங்களை நிறுத்தாமலும், கடைகளை அமைக்காமலும் இருக்க உடனடியாக வேலி அமைக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மேலும், வேலி அமைக்கும் போது பாதுகாப்பு வழங்கி ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரி காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ளார்.

Newsletter

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....