தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் மற்றும் இளைஞரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதி மறு வரையறை என்ற பெயரில் மத்திய அரசு சதி செயலில் ஈடுபடுகிறது என்றும் அதற்கு துணைபோகும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும் கண்டித்து, தாராபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தாராபுரம் கிழக்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் மற்றும் இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தொகுதி மறு வரையறை செய்வதற்கான சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வர முயற்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக கண்டித்தனர்.



கருப்பு கொடிகளை ஏந்தியும், கருப்பு சட்டைகளை அணிந்தும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தொகுதி மறு வரையறை சட்ட மசோதா நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.





இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும், நகல் எரிப்பு போராட்டத்திற்கும் தாராபுரம் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.வி. செந்தில் குமார் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, கோனப்பன் சாலை செந்தில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திமுக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...