கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


Coimbatore: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், வானதி சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது வெற்றிக்காக குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தேர்தல் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.



இன்று, வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன், வடக்கு தொகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வானதி சீனிவாசன் மேற்கொண்ட மக்கள் பணிகளை எடுத்துரைத்து, மீண்டும் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.



வாக்கு சேகரிப்பின் போது, அவர்களதுகுறைகளையும் கேட்டறிந்த அவர், “வானதி விரைவில் குணமடைந்து உங்கள் சேவையைத் தொடருவார்” என உறுதி அளித்தார்.



மறுபுறம், வானதி சீனிவாசனின் மகன்களான ஆகாஷ் மற்றும் கைலாஷ் ஆகியோர் இளைஞர் அணியினருடன் இணைந்து தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.



வேட்பாளர் நேரடியாக களத்தில் இருக்க முடியாத சூழலில், அவரது கணவரும் மகன்களும் இணைந்து அந்த வெற்றிடத்தை நிரப்பி வருவது பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...