உடுமலை அருகே உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்து 4 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் வேடப்பட்டியில் உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியில் இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே நெய்வேலியில் இருந்து உடுமலைக்கு மின்சாரம் கொண்டு வரும் புதிய உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் கோபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செல்வமாணிக்கம், பெருமாள், தங்கராஜ், சேதுபதி ஆகிய நான்கு தொழிலாளர்கள் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



உடனடியாக அருகில் இருந்த விவசாயிகள் காயமடைந்தவர்களை மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் செய்யப்படாமல், இரவு நேரத்தில் மட்டுமே நடைபெற்று வந்ததாகத் தெரிவித்தனர். மேலும், கோபுரத்தின் கம்பிகள் தரம் குறைவாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...