உடுமலை அருகே உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்து 4 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் வேடப்பட்டியில் உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியில் இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே நெய்வேலியில் இருந்து உடுமலைக்கு மின்சாரம் கொண்டு வரும் புதிய உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் கோபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செல்வமாணிக்கம், பெருமாள், தங்கராஜ், சேதுபதி ஆகிய நான்கு தொழிலாளர்கள் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



உடனடியாக அருகில் இருந்த விவசாயிகள் காயமடைந்தவர்களை மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் செய்யப்படாமல், இரவு நேரத்தில் மட்டுமே நடைபெற்று வந்ததாகத் தெரிவித்தனர். மேலும், கோபுரத்தின் கம்பிகள் தரம் குறைவாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...