கோவையில் பட்டியல் இன இளைஞர் கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் 2016ல் நடந்த பட்டியல் இன இளைஞர் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து எஸ்.சி எஸ் டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



Coimbatore: கோவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டியல் இன இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் மற்றும் இருவருக்கு ஆயுள் தண்டணை விதித்து கோவை எஸ்.சி எஸ் டி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சோலைராஜன் என்பவரது மகன் தாமரைச்செல்வன் (23) டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இரவு, சின்ராஜ் நகர் புற்றுகண் மாரியம்மன் கோவில் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தாமரைச்செல்வன், பிரசாந்த், ஜெகதீஷ் ஆகிய மூவரையும் கார்த்திக், மகேந்திரன் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. தாமரைச்செல்வனை கொடூரமாக வெட்டி, கல்லை தலையில் போட்டு கொலை செய்தனர்.



இந்த வழக்கில் கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில், மொத்தம் 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 14 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அதில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜெயசிங் என்பவர் உயிரிழந்த சூழலில், விஜய் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான், டைல் சுரேஷ், பிரகாஷ், நண்டு நவீன், விமல், ஒன்றரை கௌதம், கலைவாணன் ஆகியோர். கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, பின்னர் பலத்த பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குற்றவாளிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...