கோவையில் பட்டியல் இன இளைஞர் கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் 2016ல் நடந்த பட்டியல் இன இளைஞர் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து எஸ்.சி எஸ் டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



Coimbatore: கோவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டியல் இன இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் மற்றும் இருவருக்கு ஆயுள் தண்டணை விதித்து கோவை எஸ்.சி எஸ் டி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சோலைராஜன் என்பவரது மகன் தாமரைச்செல்வன் (23) டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இரவு, சின்ராஜ் நகர் புற்றுகண் மாரியம்மன் கோவில் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தாமரைச்செல்வன், பிரசாந்த், ஜெகதீஷ் ஆகிய மூவரையும் கார்த்திக், மகேந்திரன் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. தாமரைச்செல்வனை கொடூரமாக வெட்டி, கல்லை தலையில் போட்டு கொலை செய்தனர்.



இந்த வழக்கில் கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில், மொத்தம் 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 14 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அதில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜெயசிங் என்பவர் உயிரிழந்த சூழலில், விஜய் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான், டைல் சுரேஷ், பிரகாஷ், நண்டு நவீன், விமல், ஒன்றரை கௌதம், கலைவாணன் ஆகியோர். கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, பின்னர் பலத்த பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குற்றவாளிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...