திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 34.61 அடியாக உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tiruppur: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து காரணமாக, ஆகஸ்ட் 11 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.41 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 757 கன அடியாக உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் ஆகஸ்ட் 11 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 34.61 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து 21 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக இரு அணைகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து காரணமாக, ஆகஸ்ட் 11 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.41 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 757 கன அடியாக உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் ஆகஸ்ட் 11 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 34.61 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து 21 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக இரு அணைகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.