தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி ஆ.ராசா

நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, கோவை வடக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.


Coimbatore: நீலகிரி மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசா, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஜூலை 11 அன்று நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்டத்தின் கூடலூர் நகராட்சி மற்றும் வீரபாண்டி பேரூராட்சி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் எம்.பி ஆ.ராசா.

சாந்திமேடு, செல்வபுரம், வட்டப்பாறை, திருமலைநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம், கணேசபுரம், கவுண்டம்பாளையம், புதுப்புதூர், பழையபுதூர், தெக்குப்பாளையம், நாயக்கனூர், வீரபாண்டி ஆகிய பகுதிகளின் வாக்காளர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.



இந்த நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.இரவி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி ஆர் சண்முகசுந்தரம், கூடலூர் நகர செயலாளர் அ.அறிவரசு, வீரபாண்டி பேரூர் கழகச் செயலாளர் வே.சுரேஷ் மற்றும் இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஆ.ராசா, தொடர்ந்து மக்கள் நலனுக்காக உழைப்பதாக உறுதியளித்தார். அவர் தனது உரையில், "நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன். நமது பகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்று தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...