கோவையில் 278 பானிபூரி கடைகளில் அதிரடி ஆய்வு: 57 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை 278 பானிபூரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டது. 57 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பானிபூரி தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான விதிமுறைகள் வலியுறுத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கே.தமிழ்செல்வன் தலைமையில், உணவுப் பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு கோவையில் இயங்கி வரும் பானிபூரி விற்பனைக் கடைகள் மற்றும் தயாரிக்கும் இடங்கள், துரித உணவு விற்பனை செய்யும் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 10 அன்று ஆவாரம்பாளையத்தில் இயங்கி வரும் பானிபூரி தயாரிக்கும் இடம் மற்றும் விற்பனை இடங்களில் களஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட 10,000 பானிபூரிகள், அழுகிய நிலையில் இருந்த 12 கிலோ உருளைக்கிழங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.23,000 ஆகும். மேலும், பானிபூரி தயாரிக்க பயன்படுத்தப்படும் 5 மூலப்பொருட்கள் பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்புத்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 278 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 57 கடைகள் மற்றும் தயாரிப்பு இடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 15 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் உபயோகப்படுத்தியதற்காக 23 கடைகளுக்கு அபராதமாக ரூ.46,000 விதிக்கப்பட்டுள்ளது.

இந்த களஆய்வில் 223 சில்லறை விற்பனையாளர்கள், 9 தயாரிப்பு இடங்களில் அதிக கலர் நிறமி சேர்க்கப்பட்ட 98.5 லிட்டர் பானி, 62 கிலோ பூரி, தரமற்ற காளான் 34.5 கிலோ, 88.5 கிலோ உருளைக்கிழங்கு மசாலா, 12 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன், தரமற்ற நூடுல்ஸ், புரோட்டா என 55.45 கிலோ உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்புத்துறை பானிபூரி தயாரிக்கும் இடங்களில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பணியாளர்கள் மேலங்கி, தலைக்கவசம், கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும். இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும். விற்பனை செய்பவர்களும் தலைக்கவசம், முகக்கவசம், மேலங்கி அணிந்து விற்க வேண்டும். பானிபூரி தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீர் சுகாதாரமாக, சுத்தமாக இருக்க வேண்டும். நீண்ட நாள் இருப்பு வைத்துள்ள நீரை பயன்படுத்தக்கூடாது. காய்கறிகள் தரமானதை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...