கோவையில் 278 பானிபூரி கடைகளில் அதிரடி ஆய்வு: 57 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை 278 பானிபூரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டது. 57 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பானிபூரி தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான விதிமுறைகள் வலியுறுத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கே.தமிழ்செல்வன் தலைமையில், உணவுப் பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு கோவையில் இயங்கி வரும் பானிபூரி விற்பனைக் கடைகள் மற்றும் தயாரிக்கும் இடங்கள், துரித உணவு விற்பனை செய்யும் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 10 அன்று ஆவாரம்பாளையத்தில் இயங்கி வரும் பானிபூரி தயாரிக்கும் இடம் மற்றும் விற்பனை இடங்களில் களஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட 10,000 பானிபூரிகள், அழுகிய நிலையில் இருந்த 12 கிலோ உருளைக்கிழங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.23,000 ஆகும். மேலும், பானிபூரி தயாரிக்க பயன்படுத்தப்படும் 5 மூலப்பொருட்கள் பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்புத்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 278 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 57 கடைகள் மற்றும் தயாரிப்பு இடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 15 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் உபயோகப்படுத்தியதற்காக 23 கடைகளுக்கு அபராதமாக ரூ.46,000 விதிக்கப்பட்டுள்ளது.

இந்த களஆய்வில் 223 சில்லறை விற்பனையாளர்கள், 9 தயாரிப்பு இடங்களில் அதிக கலர் நிறமி சேர்க்கப்பட்ட 98.5 லிட்டர் பானி, 62 கிலோ பூரி, தரமற்ற காளான் 34.5 கிலோ, 88.5 கிலோ உருளைக்கிழங்கு மசாலா, 12 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன், தரமற்ற நூடுல்ஸ், புரோட்டா என 55.45 கிலோ உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்புத்துறை பானிபூரி தயாரிக்கும் இடங்களில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பணியாளர்கள் மேலங்கி, தலைக்கவசம், கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும். இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும். விற்பனை செய்பவர்களும் தலைக்கவசம், முகக்கவசம், மேலங்கி அணிந்து விற்க வேண்டும். பானிபூரி தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீர் சுகாதாரமாக, சுத்தமாக இருக்க வேண்டும். நீண்ட நாள் இருப்பு வைத்துள்ள நீரை பயன்படுத்தக்கூடாது. காய்கறிகள் தரமானதை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...