கோவை அவிநாசி சாலை மேம்பால பணி: வாகன போக்குவரத்து பாதிப்பு குறித்து மாமன்ற உறுப்பினர் கோரிக்கை

கோவை வார்டு 26 மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, அவிநாசி சாலை மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஏறுதளத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 26 மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, அவிநாசி சாலை மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவிநாசி சாலை மேம்பால பணியின் ஒரு பகுதியாக, VK ரோட்டில் இருந்து அவிநாசி சாலைக்கு செல்லும் ஏறுதளம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பாதசாரிகள், ஆட்டோக்கள், கார்கள், டாக்சிகள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று மாமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தற்போது PSG TECH மேற்கு பகுதி விளாங்குறிச்சி சாலை - அவிநாசி ரோடு சந்திப்பில் 172வது தூண் அருகில், விளாங்குறிச்சி ரோட்டில் இருந்து வாகனங்கள் உள்ளே-வெளியே போக முடியாதபடி சாலை மறைக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

இதேபோன்ற சூழல் VK ரோட்டிலும் ஏற்படாமல் இருக்க, ஏறுதளத்தை உயர்த்தி அமைத்து, 100 மீட்டர் மேற்கு புறம் தள்ளி VK ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நேரடியாகவும், முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு பதிவுத் தபால் மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளதாக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...