கோவை அவிநாசி சாலை மேம்பால பணி: வாகன போக்குவரத்து பாதிப்பு குறித்து மாமன்ற உறுப்பினர் கோரிக்கை

கோவை வார்டு 26 மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, அவிநாசி சாலை மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஏறுதளத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 26 மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, அவிநாசி சாலை மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவிநாசி சாலை மேம்பால பணியின் ஒரு பகுதியாக, VK ரோட்டில் இருந்து அவிநாசி சாலைக்கு செல்லும் ஏறுதளம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பாதசாரிகள், ஆட்டோக்கள், கார்கள், டாக்சிகள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று மாமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தற்போது PSG TECH மேற்கு பகுதி விளாங்குறிச்சி சாலை - அவிநாசி ரோடு சந்திப்பில் 172வது தூண் அருகில், விளாங்குறிச்சி ரோட்டில் இருந்து வாகனங்கள் உள்ளே-வெளியே போக முடியாதபடி சாலை மறைக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

இதேபோன்ற சூழல் VK ரோட்டிலும் ஏற்படாமல் இருக்க, ஏறுதளத்தை உயர்த்தி அமைத்து, 100 மீட்டர் மேற்கு புறம் தள்ளி VK ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நேரடியாகவும், முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு பதிவுத் தபால் மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளதாக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி தெரிவித்துள்ளார்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...