கோவை அவிநாசி சாலை மேம்பால பணி: வாகன போக்குவரத்து பாதிப்பு குறித்து மாமன்ற உறுப்பினர் கோரிக்கை

கோவை வார்டு 26 மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, அவிநாசி சாலை மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஏறுதளத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 26 மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, அவிநாசி சாலை மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவிநாசி சாலை மேம்பால பணியின் ஒரு பகுதியாக, VK ரோட்டில் இருந்து அவிநாசி சாலைக்கு செல்லும் ஏறுதளம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பாதசாரிகள், ஆட்டோக்கள், கார்கள், டாக்சிகள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று மாமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தற்போது PSG TECH மேற்கு பகுதி விளாங்குறிச்சி சாலை - அவிநாசி ரோடு சந்திப்பில் 172வது தூண் அருகில், விளாங்குறிச்சி ரோட்டில் இருந்து வாகனங்கள் உள்ளே-வெளியே போக முடியாதபடி சாலை மறைக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

இதேபோன்ற சூழல் VK ரோட்டிலும் ஏற்படாமல் இருக்க, ஏறுதளத்தை உயர்த்தி அமைத்து, 100 மீட்டர் மேற்கு புறம் தள்ளி VK ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நேரடியாகவும், முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு பதிவுத் தபால் மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளதாக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி தெரிவித்துள்ளார்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...